சத்தியமாய் ஏதோ சனியன் பிடித்துட்டு
புத்தியோ பொறுமையோ - எல்லாம் ஏமாற்றுகிறது
வைத்தியத்திற்காகவே நோய் வருகிறது-காதலியே!!
நீ பிரிந்த இன்நாளில்
சோறு வெறுக்கிறது சோகம் உதைக்கிறது
மாறுவேடம் பூண்டே சந்தியில் உலவுகிறேன்..இப்போ
சந்தி சிரிக்கிறது சாமியார் என்கிறது
முந்தி எனை முன்மாதிரியாய் பார்த
தந்தி கொடு தபால் காரனோ
கதவை தட்டவில்லை
வாழ்க்கை வெறுக்கிறது வருங்காலம் தேய்கிறது
காக்கை குருவி கூட கடைக்கண்ணால் பார்கிறது
தேக்க நிலையை என் தோளில் சுமத்தி வைக்கும்
தூக்க மத்திரையே உன்பிரிவு தோழீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக