கற்பனையில் மிதப்பாய்
கலர் கலராய் கனவு காண்பாய்-உன்
வீட்டில் நீ இருப்பதே உனக்குத் தெரியாது
அவள் தான் நீ என்பாய் நீ தான் அவள் என்பாள்
காற்றைக் கூட அவள் சுவாசித்த காற்றா?-என
முகர்ந்து பார்ப்பாய்
முகர்ந்து பிடிக்கும் நாய் கூட உன்னை விஞ்சாது - அவளின்
ஒவ்வொரு அசைவுமே பெரும் தத்துவமாக காண்பாய்-அவளை
சிறைப்படுத்தி கூட ரசிப்பாய்
யாருடனும் பேச அனுமதிக்காய்
உன் வீட்டில்
பொய்யை தவிர எதையும் சொல்லமாட்டாய்
அப்பா உதைத்தாலும் அம்மா திட்டினாலும்
அவளுக்காக என நினைத்து சந்தோசப்படுவாய்!
பாடலே பாடாத உன் வாய்க்குள்ளும்
சில பாடல்கள் முனுமுனுக்கும்
அம்மா உணவு தரும்போது
அம்மாவை அவளாய் காண்பாய்!
ஏதோ அதிஸ்டம் உனை தேடி வருகிறதாக ஏங்குவாய்
பிறக்காத உன் பிள்ளையின் பெயரை
அவள் சொல்ல- நீ சரி பார்ப்பாய்
சண்டையிட்டு பெயர் சொல்வீர்கள் !
முதல் பிள்ளை என்ன என
பாலைக்கூட ஆணா ? பெண்ணா? என தெரிவீர்கள்-ஆனால்
உங்கள் வீட்டில் நீங்கள் வயதுக்கு வந்தாலும்
சிறுவர்களே!
உன் கக்கூசு நேரமும் அவளுக்குத் தெரியும்-அப்படி
அந்தரங்கமற்ற சுகம் தெரியும்-அதிகாலை அவள்
பல் தீட்டினாளோ இல்லையோ -போனில்
அமத்தி அப்படியொரு முத்தம் கேட்பாய்
கிடைத்தவுடன் நீ பல்விளக்குவாய்
கிருமி கூட கிடுகிடுப்பாய் காதல் செய்யும்
யோக போகமென்பாய்!
உனக்குள் நீ சிரித்துக்கொள்வாய்
உன் உடையுடன் -அணிய முன்னர்
நீயே பேசிக்கொள்வாய்
போய்விட்டு வருகிறேன் என சொல்ல -உனக்கு
யாருண்டு என சிந்திக்க தோன்றும்!
அடுத்த பிறப்பை இப்போதே காணும் ஞானம் பிறக்கும்
இன்னொரு பிறவியல்ல
எல்லாப் பிறவியுமே அவள் தான் வேணுமென்பாய்
பல செல்லப்பெயர்கள் சொல்வாய் -எல்லாமே
உயிர்பெற்றுக்கொள்ளும்
சிந்தனையை அவளை தவிர எங்கேயும் சிதறவிடாய்
படிப்பை கூட அவளுகாய் படிப்பய்
காலம் வரும் வரை காத்திருப்போமென்பாய்-ஆனால்
கள்ளத்தனமாக கற்ப்பை பதம் பார்க்க எண்ணுவாய்
முடிந்துதோ முடியலையோ காலவோட்டத்தில்
இரகசியமாகவேனும் கற்ப்பை பதம் பார்ப்பாய்-அப்போது புரிவாய்
அதிசயம் இவள் தானென
அது எதுவோ - காதல்
கலியாணத்தில் முடியட்டுமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக