காதலித்துப்பார்
நீ அறியமாட்டாய் - ஆனால்
பலமுறை மனசால் சிலுவையில் அறையப்படுவாய்
தற்கொலைக்கு எண்ணுவாய் - ஆனால் செய்யமாட்டாய்
தோல்வியை தாங்கவா அல்லது தோற்க்காமல் இருக்கவா?
இரண்டு நிலை வரும்
எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்
இரண்டுமே துன்பம் தான்!
காத்துக்கிடக்க ஆசைப்படுவாய்-
ஆனால்
அப்போது தான் வாய்ப்புக்கள் வந்து குவியும்
கிட்டத்தட்ட நீ மன நோயளி ஆக்கப்படுவாய்
மறதியால் அவதிப்படுவாய் மற்றோரை வெறுப்பாய்
தனிமை உனக்கு தீனிபோடும்
சிந்த்தித்தே காலம் போக்க நினைப்பாய்-ஆனல்
இடக்கிடை திடுக்கிடும் முடிவுகள் வரும்
புலம்புவாய் எதிலுமே இறங்கமாட்டாய்
இதோ
இறுதிக்கட்டம் நெருங்கும்
ஊரே உன்னை கேலிசெய்வதாய் உணர்வாய்-அப்போது
காலமோ புரண்டோடியிருக்கும்-நீ
யாரை நினைத்து உருகினாயோ -அது
உன்முன்னே சௌக்கியமாய் குழந்தையுடன் போகும்
இதற்க்குப் பின் ஓர் ஞானம் பிறக்கும்
எவனோ! யாரோ !கட்டுவோம் கலியானமென
அங்கே பார்
அந்த சூரியன் என்றும் அப்படித்தான்
உதிக்கிறது மறைகிறது
ஆனால்
மனமோ உதித்த காதலை
மறைக்க மறுத்து
மறைந்து வாழ்ந்தே வாழ்வை தொலைக்கும்-அது
உன் சந்ததி பேரப்பிள்ளை கண்டால் கூட
என்ன சௌக்கியமா
சிலுவை வலி மற்றயவர்களுக்காக தான் சுமக்கப்பட்டது
சுமந்துகொள் உன் காதலனுக்காக நீ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக