வேற்றுக்கிரக வாசியில்லை அவள்!
வெங்கடேசின் மகள்
மாற்று மதமுடையாள் இன்ப இதழுடையாள்
சாற்று மாதுளையில் தனிரகமென்றெண்ணி
கேற்று வாயிலில் - நின்று
மணிக்கணக்கில் பாத்திருக்கேன்
கோலமிட்டு மெழுகி கோவில் செல்லும் வரை
பல்துலக்காமலே பச்சோந்தியாய் பசித்திருந்தேன் - ஆனாலும்
சொல்லவில்லை காதலை!
அயல்வீடுகளெல்லாம் அடுக்கடுகாய் ஆண்கள் -குடிகாரன் என்னப்பன்
எனக்கெங்கே கனவுக் கன்னி -அதனாலோ என்னவோ
சொல்ல வெட்கத்தில் சொல்லாமலே தவித்தேன்
சொல்லாத காதலிது செல்லாததென நினைதேன்!
படிப்பில் நான் கெட்டி என்றாலும்- என்கம்மல்
நடிப்பழகியிவள் சிரிப்பொலியில் சிதைந்துவிடும்
செடிகொடிகள் சிலதை சுரண்டி -வடு வைப்பத தவிர
வேறு வழியில்லை எனக்கு-சொல்லாத காதலிது
பல்கலையில் கூட கொடிகட்டிப் பறந்தேன்
ஒருகலையும் செல்லாத இவள்கலையில் மயங்கி
தறுதலையாக கூட வாழ்ந்து பார்த்தேன் - முடியவில்லை
சொல்லாத காதலிது
படர்கொடியொன்று என்னெழுத்தை தாங்கி -அவள் வீட்டில்
தொடர் கொடியாய் சென்றது -அப்போது கேட்டாள் அவள்
இலையில் வரையும் உங்கள் காதலை - என்
இதையத்தில் வரையலாமே யென
சொல்லிவிட்ட - என்
சொல்லாத காதலிது
செடிக்கு கூட இரக்கம் என்னில் உண்டு-என்ன இந்த
கொடிக்கு கூடவா வராமல் போகும்.!!!?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக