புதன், 22 ஜூலை, 2020

பூ தரித்த கர்ப்பம் !



ஓ மரங்களே!
ஓ கொடிசெடிகளே!
சொல்லுங்கள்

நறு மணம் வீசியது யார்?
தேனீக்களை அழைத்தது யார்?
பாட்டுக்கு கவி எழுதி
காற்றினில் பறக்கவிட்டது யார்?
கற்பம் தரிக்கும் ஆசையா அல்லது
காமவயப்பட்ட ஆசையா?

தரகு வேலையில்
தேனீக்கள் கெட்டிக்காரர்களா என்ன?
நீங்கள் கொடுப்பது தேனில்லை
அது உங்களுக்கு தெரிந்த பாசை
 நாங்கள் என்ன செய்வது
இனிக்கிறதே!
அதனால்
நாக்கை தொங்கப்போடுகிறோம்

உடலுறவுக்கு அழைக்கப்பட்ட
 3ஆம் நபர்களா தேனீக்கள்?
இல்லை
வெட்கத்தை மலர்ந்து காட்டி
காற்றால் கதை பேசும்
கலையா நறுமணங்கள்

தேன் எடுக்கும் தேனீக்களை விட
தேனீயை கண்டதும்
உங்கள் நழினங்கள் உளதே
அவை ஏன்?

அப்படி என்ன சுரப்பிக்கால்
இப்படி இனிமையை காட்டி
கற்பிற்காய் காமம் கேட்டு
இரவோ பகலோ ஓய்வின்றி
ஒருமிக்கும் அன்புளதே

நீங்கள் ஓரறிவுக்கூடமல்ல
மனிதனின் பொறாமையால்
அவன் அப்படித்தான் செய்கிறான்
விளங்கிக்கொள்ளுங்கள்

நீங்கள் வெட்டப்படும்போதெல்லாம்
கண்ணீர் சிந்துவது உங்களோடு கூடிய
தேனீக்களும்,சிட்டுக்கலும்
 எம் இதய துடிப்பும் தான்

ஆனால் இதயம் வேறாகவும்
மனிதன் வேறாகவும் உளதால்
யார் மனிதன் எனும் வினாவிற்கு
விடை கொடுங்கள் நீங்களே!

Photo by Tuấn Kiệt Jr. from Pexels

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

முகில் நிலா#@!



























மூடி வைத்துவிட்டு
 மெது மெதுவாய்திறக்கும்
பெட்டகமே!

ஏன் 
ஒழிந்துகொண்டு வழர்ந்து வந்து
ஒளிதருகிறாய்?


காதல் கைகூட வெட்கமும் நாணமும்
அழிய
முற்றும் திறந்த முனிவராவோமே
அந் நாளில் தான் நீ பௌர்ணமியோ?

அல்லது

முற்றும் திறந்த பின்னர் யாரும் காணா வண்ணம்
முழு இரவில் முத்தெடுப்போமே
அது தானோ அமாவாசை

முகிலிலும் மறைகிறாய்
முற்றாயும் மறைகிறாய்
சில்மிசம் செய்துவிட்டு
கற்பை பதம் பார்க்கும் வடிவமா?
சொல் நிலாவே சொல்@!



திங்கள், 30 ஏப்ரல், 2018

கனத்ததா உள்ளம்!

பணம் மாற்றும் உள்ளம்
குணம் மாறும் காதல்
கணம் சிந்தை செய்ய
மனம் தேய்ந்து போச்சு

இன மானம் பேசி
இருப்பென்று ஊதி
கன தானம் செய்து
கடந்திட்ட போது

சில நாய்கள் வந்து
பல வாயால் குரைத்து
நலமாக வாலை குறுக்காக ஆட்ட
நிலம் மாறி போச்சு
நிம்மதியும் போச்சு





வெள்ளி, 27 ஏப்ரல், 2018

நிர்வாணக் காதல்!!!




















காற்றுக்குள் புகுந்து களவாக கண்சிமிட்டி
நாற்றமெடுக்குமிடமெல்லாம் நறுமணம் வீசி
கூட்டத்துக்குள் உனைக்கண்டு
கூச்சமடந்து
மூச்சு முட்ட முட்ட -தந்த
முத்தம்!
ஆஹா..ஓஹோ

ஏந்திக்கொள் என நீ பொழிய
வாங்குகிறேன்னென நான் மகிழ-மொத்தத்திலெம்
பித்தம் பிதிதிர் தீர்த்ததுவே-அங்கே
மொட்டு மழழைக்கு ஓர் அரும்பு நாட்டினாயே!!

களவாணிப்பையா!!!
வானத்திலுள்ள கருங்குகைக்கு-பல
கற்பனைகள் வடிக்கும் விஞ்ஞானமே -இங்கே
படித்துக்கொள்!
இதற்கு அர்த்தமும்
அதற்கு மொழியும் ஒன்றென்றாய்

ஞானம் பிறக்குமிடம் பெண்ணுக்குள் ஆண்
ஞானம் விளங்குமிடம் ஆணுக்குள் பெண்
இயற்கை மூளை சலவை செய்த மனிதமே
காதல் மூலை சலவை செய்த இயற்க்கையே
கவிழ்ந்து நின்றுபார்
எல்லாம் முக்காலே
நிர்வாணம் அங்கலாய்த்து
அங்கே தெரியும்!!!

சனி, 13 ஜனவரி, 2018

அழகுதமிழ் பொங்கல்!!!





பொங்கி வழியும் பாலே -இப்
பூமிப்பந்தில் அங்கங் கொடு தமிழர்க்கு-அது
நாடாய் அமையட்டும்!!
சுட்டெரிக்கும் கண்ணுடயானே
பட்டப்பகலிலெல்லா திருடரிங்கு- எங்கே
வேலையை காட்டு
தமிழன் பொங்கினான் நன்றி தெரிவித்தான் என
நாழிகை கழிக்காதே!!!
இங்கு தானுள்ளோம் இதோ ஈழம்
தனியாய் தா எமக்கு!

இனிய தமிழ் பொங்கல்


பொங்குகிறோம் தமிழை
புகழ்கிறோம் தமிழழகை
நவில்கிறோம் நன்றியை
சூரிய தேவா நீ சூனியம் அழித்த தேவா!
ஆரியமில்லை இது ! தமிழ்!!!

அடங்கமாட்டோம் அதட்டலுக்கு!
வீரங்கொண்ண்ட  இவ்வுலகின் மூத்த குடி
நீயும் திமிர்கொல் எம்மால்- இதோ
எத்தனை தடவை வேண்டுமானாலும் வைத்துகொள்
நன்றி நன்றி நன்றி
முடிவற்ற தமிழனின் வார்த்தை!! பெற்றுக்கொள்!
எம்மவர் நன்றியை...

பொங்கல் கவிதை

தையே வருக!
தவிப்பெலாம் போக்குக!
களைபிடுங்கி எமை-நல்
நிலை யாக்குக.
அனைவருக்கும் இனிய தமிழ் பொங்கல் வாழ்த்துக்கள்

உங்களுக்கு பிடித்த பொங்கல் எது? ஏன.ஒர் இலக்க த்தை தெரிவு செய்து காரணத்தை எழுட்




விவசாய வாழ்க்கை ஓஹோ!!!

வேலிக்கரையோரம் வெறும் பாத்திரம் தேய்க்கையிலே
ஓரக் குடில்பக்கம் அப்பத்தா ஓலைக்குட்டான் செய்ய
பூனை அருகிருந்து ஓர் முருங்கை அணில் பார்த்து
நாய் துரத்தவொண்ணா கடு கதியில் சென்று கவ்வ


சோலை கரம் தடவும் தமிழ் தென்றல் காற்றினிக்க
காலைக்கடன்கழிக்க பெருசு ஒதுக்கை பக்கம் சென்று
கூழாங்கல்லிருக்கும் குளத்தின் அந்தப்பக்கம்
வாரி அடித்து தண்ணீர் உள்ள வடுக்கையடிக்கழுவி
காறி உமிழ்ந்து துப்பி அந்தக் கழிப்பின் பின் மகிழ்ந்து


பாதி வழி வந்து யாண் வேப்பங்குச்சி கொய்து
பாடுபார்த்து கடித்துப் பல் துலக்கி பின்
மாட்டு சாணமள்ளி அதற்க்குத் தீனி போட்டு
பாட்டுப்படி வந்து பழஞ்சோற்றுக் கஞ்சி மென்று

நாட்டுடை கலப்பைகொண்டு நாணைல்புல் வயல் கடந்த்து
மாட்டுடன் வீறுபோட்டு உழுவயல் சென்றுழுது
மடியில் வெற்றிலையை போயிலையுடன் சேர்த்துப்போட்டு-அந்த
நமைச்சலில் சளியை காரித்துப்பி


ஏரை பிடித்து பதமாய் மெல்ழுலுது
மதியக்கணக்கில் மனமொத்து கழைப்பாற
மனுசி கொண்டுவந்த கத்தரிக்காய் மாசிக்கறி
வாயைக் கொப்புளித்து கமகமக்க வயிறுண்டு

பூவரச மரத்துஅடியில் சின்னத்தூக்கம் போட்டு
மறுகுழுக மீண்டும் மோர்முறை வெற்றிலை போட்டு
மாலை வருங்கணக்காய் வயலை வளமாக்கி
வாழும் எம் வாழ்க்கைதான் விவசாய வாழ்க்கை ஓகோ!!




செவ்வாய், 9 ஜனவரி, 2018

காலை விடியுதே !!!



கொக்கரோ கூ...என சேவல் கூவுதே..!
துஞ்யிடும் மழலையாள் குயிலும் கூவுதே..!
கத்தரி தோட்ட ஆட் காட்டி கத்துதே!
காகங்கள் மகிழ்வாய் கதைகள் பேசுதே!

தொட்டிலில் பிள்ளையோ அலட்டிக் கேட்குதே!
தகப்பனையும் அது எழுப்பி விடுகுதே!
தாயையும் பிள்ளை அம்மாவெங்குதே !-தமிழ்
தரணியை தாவியே காலை விடியுதே!
காலை விடியுதே ! தமிழ்க் காலை விடியுதே!

திங்கள், 8 ஜனவரி, 2018

நண்பியை காதலித்தேன்!! ஆனால் தேறியது

சூழ்நிலை
நண்பி கல்லூரியில் படிக்க சேருகிறாள் .ஆனால் மிகவும் பயந்த சுபாவமுடையவள்.அவளுக்கு பல நண்பிகள்,அவளின் குணம் எல்லொரிலும் தனிப்பட்டு தெரிகிறது.அவள் எதையோ சாதிக்க நினைக்கிறாள் ஆனால் வறுமை அவளை பின்னோக்கி இழுக்கிறது.காதலிக்குமவன் உண்மையில் வறுமைக்கே உதவுகின்றான்.ஆனால் உதவி செய்த அந்த மனசை அவள் மறாக்காமலிருக்க விரும்புகின்றாள்.அதற்க்காக அவனை கலியாணம் செய்யலாம் என முடிவாய் நினைக்கிறாள்.இவன் காதலித்தானா இல்லயா என்பதை சொல்லாமலேயே அறிய நினைக்கிறாள்.அப்போது புரிகிறாள் அவன் காதலிப்பது அவளின் வறுமையை போக்கும் வழிகளையும் ,அவளையும் சேர்த்தே என்பது.அது கலியாணத்தில் முடிகின்றது.

பாடல்

பல்லவி
கொடியிடை நடையோடு கலை மேகமாய் பிறந்தவளே
விடைதருமிந்த ஜீவன் உந்தன் புன்னகை பூப்பதற்கே

சரணம்
ஆண்
சித்தத்தில் மிதித்து அந்தக் கொடும் வறுமை-என் 
முத்ததால் போக்கிடுவேன் கண்ணிமைக்கிளியே-உன்
கருங்கூந்தல் வாசமொன்றே போதுமெனக்கு -அந்த 
சாதனைக்கு சொந்த காரி நீதான் மிடுக்கே

வந்தது பாவமில்லை போவதும் சாபமில்லை
ஏழ்மையே உந்தன் அன்போ கோடியில் கிடைப்பதில்லை
மர்மமே மனசை ஏந்தான் வதைக்கிறியே
மாலைக்குக் கண்ணிருந்தால் விழுந்திடுமே

பெண்
வாழ்க்கையின் முடிவை ஜன்மம் எலுதியதோ
சொர்க்கத்தை சொந்தம் வந்து காட்டியதே
கல்லூரி படிக்க வந்தேன் வறுமையால் துடித்து நின்றேன்
வாழ்க்கைக்குள் மனசை விட்டு துலாவி எடுத்துபார்த்தேன்
அன்பே நீ என் சொந்தம் ஆவதற்கே

கடவுளை காண்பதற்க்கு கோவிலில்லை 
கணவனாய் காண்பதற்கு நீயிருக்காய்
சொந்தமே சோகமில்லை உன்மடியில்
துக்கமே தூளாய் போச்சு உன் அணைப்பில்

அற்புதம் ஆண்டவனே ஐயமே தேவையில்லை
ஆழமாய் காதலித்தால் ரத்ததில் ஊற்றெடுக்கும்
மாற்றாமாய் மாற்றிய என் நண்பனே -நீ
வருங்கால புருஷனாக வந்தாலே....


ஆண்
நான்நினைத்த நினைப்பை நீயெடுத்து விடுத்தாய்
என் பொண்டாட்டி நீதானடி
வானகத்து பறவை மனசறியும் பெண்ணே -என்
வாழ்நாளே உன்னோடுதான்

 பெண்
உன் முத்தமழைக்குள் நான் முத்து தேட -என்
சொந்தமான புருஷா சோதனைக்கு தயாரா...என்
மொத்தமான சுகத்தில் உனை அணைக்க
மோகமிருக்கு

ஆண் -பெண் இருவரும்

சுகம் சுகமென நாங்கள் இதழ் மழந்திடும் தேனை
அகம் புறமெல்லம் பார்த்து உறிஞ்சியெடுப்போம்
கலை அலைகடல் கொண்டு அனுபவிப்போம்
கலியாணமென்ன...கவி தாளமென்ன
ஒரு நாணல் பூவின் வாடல் பார்க்க
நல்ல நேரமென்ன

தண்ணி யூற்றி தண்ணி யூற்றி வழர்ப்போம்
தாகம் தீர்த்து தாகம் தீர்த்து கழிப்போம்

ழாஅ






முத்தம் ஓர் அமிர்தம்!!!

💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

















மேலுதட்டை கீழ் உதட்டால் வருடி-பின்
கீழுதட்டை நுனிப்பலால் இழுத்து
நாக்கை நாக்கால் சுவைத்து
உமுழும் நீர் -அது
எச்சியில்லை ஆனால் அமிர்தம்

நொடிமறக்கும் இன்பமதில்
 நெற்றிக்கண்ணே திறக்கும்
கதிரவனே சூரியனே கலைந்து போ என
மனங் கேட்கும்
கலவிக்கு மகுடம் அமைக்க
மனங்கள் ஒத்துக்கொள்ளும்

மாறுபட்டு பட்டு மதங்கள் உதட்டால் மாறும்
இறுக்கத்தின் தன்மை கூடும்
மனம் மயங்கி
மதி முத்தத் தேனருவியில் தள்ளாடும்
பிணயலுடை பாம்பு போல புதிர் உண்டாகும்

கைகள் கால்கால்கள் இடம் மாற எத்தனிக்கும்
எங்கோ ஒரு ஸ்...பரிசத்தை மனம் ஏவும்
உச்ச நிலைக்குள் உருகி உடல்கள் வேர்க்கும்
முத்தம் அமிர்தமாகும் போது மூச்சு ராகம் பாடும்

ஆனந்த லீலைகள் அரங்கேறும் வரை
முத்தம் அமிர்தமாகவே இருக்கட்டும்-ஏனெனில்
உயிர் கலக்குமிடம்,காதலின் சுவை ,காமத்தின் புதிர்
எல்லாமே உதட்டின் இதழில் உலாவரும் கீதங்களே!!


ஞாயிறு, 7 ஜனவரி, 2018

காதலித்தால்!??

கற்பனையில் மிதப்பாய்
கலர் கலராய் கனவு காண்பாய்-உன்
வீட்டில் நீ இருப்பதே உனக்குத் தெரியாது
அவள் தான் நீ என்பாய் நீ தான் அவள் என்பாள்

காற்றைக் கூட அவள் சுவாசித்த காற்றா?-என
முகர்ந்து பார்ப்பாய்
முகர்ந்து பிடிக்கும் நாய் கூட உன்னை விஞ்சாது - அவளின்
ஒவ்வொரு அசைவுமே பெரும் தத்துவமாக காண்பாய்-அவளை
சிறைப்படுத்தி கூட ரசிப்பாய்
யாருடனும் பேச அனுமதிக்காய்

உன் வீட்டில்
பொய்யை தவிர எதையும் சொல்லமாட்டாய்
அப்பா உதைத்தாலும் அம்மா திட்டினாலும்
அவளுக்காக என நினைத்து சந்தோசப்படுவாய்!

பாடலே பாடாத உன் வாய்க்குள்ளும்
சில பாடல்கள் முனுமுனுக்கும்
அம்மா உணவு தரும்போது
அம்மாவை அவளாய் காண்பாய்!

ஏதோ அதிஸ்டம் உனை தேடி வருகிறதாக ஏங்குவாய்
பிறக்காத உன்  பிள்ளையின் பெயரை
அவள் சொல்ல- நீ சரி பார்ப்பாய்
சண்டையிட்டு பெயர் சொல்வீர்கள் !

முதல் பிள்ளை என்ன என
 பாலைக்கூட ஆணா ? பெண்ணா? என தெரிவீர்கள்-ஆனால்
உங்கள் வீட்டில் நீங்கள் வயதுக்கு வந்தாலும்
சிறுவர்களே!

உன் கக்கூசு நேரமும் அவளுக்குத் தெரியும்-அப்படி
அந்தரங்கமற்ற சுகம் தெரியும்-அதிகாலை அவள்
பல் தீட்டினாளோ இல்லையோ -போனில்
அமத்தி அப்படியொரு முத்தம் கேட்பாய்
கிடைத்தவுடன் நீ  பல்விளக்குவாய்
கிருமி கூட கிடுகிடுப்பாய் காதல் செய்யும்
யோக போகமென்பாய்!

உனக்குள் நீ சிரித்துக்கொள்வாய்
உன் உடையுடன் -அணிய முன்னர்
நீயே பேசிக்கொள்வாய்
போய்விட்டு வருகிறேன் என சொல்ல -உனக்கு
யாருண்டு என சிந்திக்க தோன்றும்!

அடுத்த பிறப்பை இப்போதே காணும் ஞானம் பிறக்கும்
இன்னொரு பிறவியல்ல
 எல்லாப் பிறவியுமே அவள் தான்  வேணுமென்பாய்
பல செல்லப்பெயர்கள் சொல்வாய் -எல்லாமே
உயிர்பெற்றுக்கொள்ளும்


சிந்தனையை அவளை தவிர எங்கேயும் சிதறவிடாய்
படிப்பை கூட அவளுகாய் படிப்பய்
காலம் வரும் வரை காத்திருப்போமென்பாய்-ஆனால்
கள்ளத்தனமாக கற்ப்பை பதம் பார்க்க எண்ணுவாய்

முடிந்துதோ முடியலையோ காலவோட்டத்தில்
இரகசியமாகவேனும் கற்ப்பை பதம் பார்ப்பாய்-அப்போது புரிவாய்
அதிசயம் இவள் தானென
அது எதுவோ - காதல்
கலியாணத்தில் முடியட்டுமே!


சொல்லவில்லை ஆனால் காதலித்தேன்!

ஆற்று மணல்கரை அருகிலொரு குடிசை 
வேற்றுக்கிரக வாசியில்லை அவள்!
வெங்கடேசின் மகள்
மாற்று மதமுடையாள் இன்ப இதழுடையாள்
சாற்று மாதுளையில் தனிரகமென்றெண்ணி

கேற்று வாயிலில் - நின்று 
மணிக்கணக்கில் பாத்திருக்கேன்
கோலமிட்டு மெழுகி கோவில் செல்லும் வரை 
பல்துலக்காமலே பச்சோந்தியாய் பசித்திருந்தேன் - ஆனாலும்
சொல்லவில்லை காதலை!

அயல்வீடுகளெல்லாம் அடுக்கடுகாய் ஆண்கள் -குடிகாரன் என்னப்பன்
எனக்கெங்கே கனவுக் கன்னி -அதனாலோ என்னவோ
சொல்ல வெட்கத்தில் சொல்லாமலே தவித்தேன்
சொல்லாத காதலிது செல்லாததென நினைதேன்!

படிப்பில் நான் கெட்டி என்றாலும்- என்கம்மல்
நடிப்பழகியிவள் சிரிப்பொலியில் சிதைந்துவிடும்
செடிகொடிகள் சிலதை சுரண்டி -வடு வைப்பத தவிர
வேறு வழியில்லை எனக்கு-சொல்லாத காதலிது

பல்கலையில் கூட கொடிகட்டிப் பறந்தேன்
ஒருகலையும் செல்லாத இவள்கலையில் மயங்கி
தறுதலையாக கூட வாழ்ந்து பார்த்தேன் - முடியவில்லை
சொல்லாத காதலிது

படர்கொடியொன்று என்னெழுத்தை தாங்கி -அவள் வீட்டில் 
தொடர் கொடியாய் சென்றது -அப்போது கேட்டாள் அவள்
இலையில் வரையும் உங்கள் காதலை - என் 
இதையத்தில் வரையலாமே யென

 சொல்லிவிட்ட - என் 
சொல்லாத காதலிது
செடிக்கு கூட இரக்கம் என்னில் உண்டு-என்ன இந்த
கொடிக்கு கூடவா வராமல் போகும்.!!!?







அவளின்றி சில நாள்

சத்தியமாய் ஏதோ சனியன் பிடித்துட்டு
புத்தியோ பொறுமையோ - எல்லாம் ஏமாற்றுகிறது
வைத்தியத்திற்காகவே நோய் வருகிறது-காதலியே!!
நீ பிரிந்த இன்நாளில்

சோறு வெறுக்கிறது சோகம் உதைக்கிறது
மாறுவேடம் பூண்டே சந்தியில் உலவுகிறேன்..இப்போ
சந்தி சிரிக்கிறது சாமியார் என்கிறது
முந்தி எனை முன்மாதிரியாய் பார்த
தந்தி கொடு தபால் காரனோ
கதவை தட்டவில்லை

வாழ்க்கை வெறுக்கிறது வருங்காலம் தேய்கிறது
காக்கை குருவி கூட கடைக்கண்ணால் பார்கிறது
தேக்க நிலையை என் தோளில் சுமத்தி வைக்கும்
தூக்க மத்திரையே உன்பிரிவு தோழீ



மகிழ்ந்துகொள் அதனால் காதல்

நீ பூவை பார்த்து
 இப்படி சொல்வாயென நினைக்கவில்லை! ஆச்சரியம்
வண்டு கோபப்பட்டால் கொட்டிவிடும்


என்னவளே தேன் பூவில் மட்டுமா உண்டு??-மன்னித்துகொள்
வண்டு உன்னை முத்தங்கொடுக்க நினைக்கிறது உனக்கு
நீ ஒரு பூ-அதுவும் ரோஜாப்பூ


நான் கவனமாக பார்க்கின்றேன் வண்டை-அதோ பார்
உன்னை தொலைவில் கண்டுவிட்டே இப்படி ரீங்காரம் 
எனக்குத்தெரியாத ஒன்றையா நீ வைத்திருக்கிறாய்
சொல் பெண்ணே சொல்-அது என்ன


முத்தத்தில் நனையும்முன்பே உன் முந்தானை
எனை வருடியதே -அதுவா?
அதற்கு மேலும் உள்ளதுவே 
அத்துமீறாமல் நீ பார்த்துக்கொள்வாயே அதுவா?


எதுவோ !
நீ மகிழ நான் நான் மகிழ நீ
அதனால் ஒரு குழந்தை அம்சமாகுமென்கிறேன் 
மகிழ்ந்த்துகொள் என்னவளே!




சிலுவை வலி வேண்டுமா? காதலி

காதலித்துப்பார்
நீ அறியமாட்டாய் - ஆனால்
பலமுறை மனசால் சிலுவையில் அறையப்படுவாய்
தற்கொலைக்கு எண்ணுவாய் - ஆனால் செய்யமாட்டாய்
தோல்வியை தாங்கவா அல்லது தோற்க்காமல் இருக்கவா?


இரண்டு நிலை வரும்
எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்
இரண்டுமே துன்பம் தான்!
காத்துக்கிடக்க ஆசைப்படுவாய்- ஆனால்

அப்போது தான் வாய்ப்புக்கள் வந்து குவியும்
கிட்டத்தட்ட நீ மன நோயளி ஆக்கப்படுவாய்
மறதியால் அவதிப்படுவாய் மற்றோரை வெறுப்பாய்


தனிமை உனக்கு தீனிபோடும்
சிந்த்தித்தே காலம் போக்க நினைப்பாய்-ஆனல்
இடக்கிடை திடுக்கிடும் முடிவுகள் வரும்
புலம்புவாய் எதிலுமே இறங்கமாட்டாய்

இதோ
இறுதிக்கட்டம் நெருங்கும்
ஊரே உன்னை கேலிசெய்வதாய் உணர்வாய்-அப்போது
காலமோ புரண்டோடியிருக்கும்-நீ
யாரை நினைத்து உருகினாயோ -அது
உன்முன்னே சௌக்கியமாய் குழந்தையுடன் போகும்


இதற்க்குப் பின் ஓர் ஞானம் பிறக்கும்
எவனோ! யாரோ !கட்டுவோம் கலியானமென


அங்கே பார்
அந்த சூரியன் என்றும் அப்படித்தான்
உதிக்கிறது மறைகிறது
ஆனால்
மனமோ உதித்த காதலை
மறைக்க மறுத்து
மறைந்து வாழ்ந்தே வாழ்வை தொலைக்கும்-அது
உன் சந்ததி பேரப்பிள்ளை கண்டால் கூட


என்ன சௌக்கியமா
சிலுவை வலி மற்றயவர்களுக்காக தான் சுமக்கப்பட்டது
சுமந்துகொள் உன் காதலனுக்காக நீ.




சனி, 6 ஜனவரி, 2018

காதலின் பிரிவால் காதலி

எனக்கென நினைத்தேன் வாழ்க்கையை தொலைத்தேன்
பழகிய காலம் -பாழாகிப்போனதே
என்னுறவே!
 உன் இனிமையான முற்கோபம் -என்னை
 சாறாக பிழிந்த அன்பின் ரூபம்
தாங்குகிறேன் உன்னை என விடுதியில் கூட-உன்
தோளில் சுமந்து காட்டினாயே !!
அதையுமா மறந்தாய் இப்போ?



என் மூக்கை உன் முக்கில் வைத்து
சுவாசித்துக் காட்டினாயே!!
உதட்டை விடியும் வரை ஒட்டியிருப்போம் என
நடுநிசியில் தூங்கினாயே
நான் குழந்தை என்றேன்
அதுவுமா ஞாபகமில்லை??





களவாணிக்காதலாச்சே கற்புக்கு நீ சொன்ன
அர்த்தங்கள் எங்கே-எனை ஏமாற்றவா
விடுதிக்கு விடுதி விடுமுறை போட்டய்??-இதோ உன்
ஆத்துமாவிற்க்குள் பல நிலையில் புதைந்தேன்-நீயும் என்
ஆத்துமாவிற்க்குள் புதைந்திருக்கின்றாய்
பேயாகிக்கூட உன்னுடனே வாழ்வேன்
மறக்காதெ !
துரத்தி வருவேன் உனை-எங்கே
வாழ்ந்து காட்டு பார்க்கிறேன்







கசக்காத காதல் நதிக்கே நதி!

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💋💋💋💋💋💋💋💋
கனிக்குள் இனிப்புமுண்டு அமிர்தமும் உண்டு
காதலில் இனிமைக்குள் ஓர் அமிர்தமிண்டு
மனங்கள் கலக்கும் அதிநொடியே
உனக்கென்ன மாத்திரை??
கசக்காமல் காதல் செய்யும் நொடியே
நீயும் காலத்திற்குள் உள்ளடகமா?
ஓ நதியே நீ கூட நீர் வற்றினால் ஓய்ந்துவிடுவாய்
நாம் காதலிக்கிறோம் -இல்லை
நதியையே கேட்கிறோம்
எம் காதலின் வற்றாத நிலையா?
வற்றிப்போகும் உன் நீர் ஓட்டமா?
வா போட்டிக்கு
காதல் கசக்காது சலிக்காது
ஓடும் நதியல்ல!
நதிக்கு பாடம் கற்பிக்கும்
நதிக்கே நதி!
💝💝💝💝💝💝💝💝💝💝💝💘💘💘💘💘💘💘💘💘💘💘💗💗💗💗💗

காற்றுவிடு காதல் தூது

காற்று என்றால் விஞ்ஞானத்துக்கு வகை தெரியும்
காதல் வந்தால் காற்றிற்கு மொழிபுரியும் -ஆதலால்
காற்றே வா ..விஞ்ஞானமே போ
நாம் கதலிக்கும் மனிதர்கள்

அனைத்தும் அறியும்காற்றே உனை நம்பி
என்னுயிரே இயங்கும்போது
இதற்க்குமேல் எனக்கேன் கைபேசி சேதி சொல்ல??

போ ..என் கதலியிடம் கேட்டு வா
அவள் உயிரை என்னிடம் அழுத்தி
எனக்குள் அவளை உறையவை
நித்திரைக்குள்ளும் பேசச்சொல்
நானும் அப்படியே செய்கிறேன்

காற்றின் பதில்
நண்பனே!
போனேன் சொன்னேன் செய்தேன்
உன் காதலியை நான் தொடுவது குற்றமாச்சே!! அதனால்
உன் அன்பின் ஆழம் கருதி
அவளைப்பார்த்தேன்,அருகில் சென்றேன்
அவள் சுவாசிக்கும் படி உள்ளே நான் செல்லவில்லை-அதனால்
மரணித்துவிட்டால்.


சிவப்பு நிறத்தழகி

சிவப்பு நிறத்தழகி சிந்தை குறத்தழகி
பசப்பு வார்த்தக்கெலாம் பசப்பாக போற பெண்ணே!
கசக்க முசக்கவென கடுகுக் காரம் கொண்ட
லடக்க ழுடக்கவுக்கு வயக்காடு வாடி புள்ளே

அடியே..
சொர்க்க திறப்பையெடு ..சொல்லாலே மயக்கங்கொடு
பக்கத்துல யாரும் படுபாவி இல்லபுள்ளே
விக்க விக்க -நீ விண்னை முட்டும் மின்பம்
தக்க நேரம் புளே தவிக்க வைகாதே

போங்க--
அந்தாப் புரத்துக்கு சொந்த காரனில்ல
ஆத்தாக் கடந்த்திட்டா ஆலோல மாலோலம்!!
பொட்டா பிள்ளபிடிச்சு பொண்டாட்டி தவிக்கவிட
மிச்சம் திமிருக்கா வாருங்கா
 இல்லா மீதி திமிரடக்க வாருங்கா!

புள்ளே..
மிச்சா திமிருருக்கு மீதி திமிருருக்கு
மொத்தமுன்கிட்ட பாக்குரேன்-அடி மோதீ
நீயென்னை மழுக்கடி யென்னை மழுக்கடீ
தெட்ட தெவிட்டலுக்க தள்ளடீ -நான்
தெவிட்டிட இன்பம் காட்டடி









காதல் தோற்றாலே காதலர்கள் வெல்வார்கள்!

பிடுங்கப்படுகின்ற பழங்களுக்குள்
மரமாகும் விதைகளுண்டு!
காதலும் அப்படித்தான்
காதலும் கனிந்த பின்னர் பிடுங்கப்பட வேண்டும்
அப்போது தான் அது முழைவிட்டு மரமாகும்!

இல்லையெனில் காதல்வாழாது
கல்யாணத்தில் முடிந்த காதல்களில்
காதலின் ஏக்கம் இல்லை
காதலர்களின் ஏக்கமும் இல்லை!


தேனிலவு

கண்ணில் சிறு துளி நீரால்
 எனை நனைத்தே பார்த்தால்!
களவாகக் கழிக்கிறோம் தேனிலவை-ஆனால்
நீ என் நிரந்தரக் கணவன் தானேயென- ஆனால்
 நான் கிறுக்கன்

அவள் முத்தம்

என் வாழ்க்கையில் எதையாவது
 மறக்கவேண்டுமெனில்
அவள் முத்தத்தில் நனைந்த சிந்தனை
அது ஒன்றே போதும்!
மரண வீடு கூட மங்களமாய் தெரியும்.


காதல் முறிய வெளிநாட்டு மாப்பிள்ளை

வெளிநாட்டு மாப்பிள்ளை
வெள்ளையாய் மிடுக்காய் அதுவும் புதிதாய்
கையில் சில விலை கூடிய கனப்பொருள்
கழுத்தில் மின்னும் தங்கக் கடை
இதை ஆழப் பிறந்தவளாச்சே...ஆனால்

உள்நாட்டு காதலனோ --ச்சா
வியர்வை மணம்...எப்போதும் ஒரே கைபேசி
கழுத்தில் வெறும் கருப்பு கயிறு
வெளிநாடு ..ஆஹா ஓஹோ என
கன்னியவள் காதலை உதற
கபட முடிவெடுத்தால்.

காதல் முற்றியது- ஆனால் மீன் சந்தையில்

அவள் உதடு ரீங்காரம்  செய்து பதம் பார்க்க சொல்கிறது
என்னுள்ளத்தில் தேன் சொரிகின்றது
மனசோ மந்திரித்து விட்ட கோழி போல் நடிக்கிறது-இருந்தாலும்
கலாச்சாரம் தடுக்கிறது -ஏனெனில்
அது ஒரு மீன் சந்தை

இதோ நான் -தாயே

மெய் சிலிர்க்க மேனி தழவளாவி
அன்பிழுக்க அதில் ஆழப் புதைந்து
புல்லரிக்க நீ பதமாய் கற்பமுற்று
தந்தைக்கு ஒர் வரம் கொடுதாய் -தாயே
இதோ நான்.

ஞாயிறு, 7 மே, 2017

மாலை ! பூக்கள் விடும் கண்ணீரால் பிறந்தவை

மாலை ! பூக்கள் விடும் கண்ணீரால் பிறந்தவை
--------------------------------------------------------------------
பல மலர்களின் வழ்வுரிமை மறுக்கப்பட்டு,
அவை கொய்யப்பட்டு,
ஒருமைப்பாடு சிதைக்கப்பட்டு,
அங்கொன்றும் இங்கொன்றுமாக முடியப்பட்டு,
இதோ அழகான மாலையினை
அமரிக்கா பின்னிக்கொண்டிருக்கிறது!!!
.
ஆச்சரியப்படாதீர்கள்
எங்களின் குரல்கள்
மாலையில் இருக்கும் பூக்களைப்போன்றவை,
எங்களின் உரிமை
அவர்களால் பின்னப்படும் அழகான மாலைக்குள்
பல இடங்களில்,
அங்கொன்றும் இங்கொண்றுமாக
.
பேசாத பூக்களை, பேசாதே என சொல்லத் தேவையில்லை,
விரும்பியபடி கொய்யப்படுகிறோம்
ஏனெனில் அவர்களின் அழகுக்காகவே
நாங்கள் வாழ்கிறோம்.
கே தர்ஷன்

Nice Dance for laughing- வயிறு குலுங்க சிரியுங்க

நல்ல சிரிபூட்டும் ஆட்டம்,வயிறு குலுங்க சிரியுங்க.சிலர் நினைக்கிறார்கள் தாங்கள் குண்டு என்\றால் ஆட முடியாதென்று.பாருங்கள் அருமையான ஆட்டம்.சும்மா தலைய எப்படி ஸ்டைலாகா  அசைச்சு சும்மா ஒரு குத்தாட்டம் போடுரார் இந்த இளைஞ்ஞன்.